இளவயதிலேயே ஒருவர் ஏன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்?

இளம் வயதிலேயே ஏன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

லதா, நேஹா என்ற இரு நண்பர்கள் வெவ்வேறு வயதில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். லதாவுக்கு 25 வயதாக இருந்தபோது, அவர் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினார், நேஹா 35 வயதில் அதே தொகையை முதலீடு செய்யத் தொடங்கினார். இவர்களுக்கான சராசரி வருடாந்திர ரிட்டர்ன் 12% என வைத்துக் கொண்டால், 60 வயதில் அவர்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோக்கள் எப்படி இருக்கும் என்பது இங்கே வழங்கப்பட்டுள்ளது:

  • 60 வயதிற்குள், லதாவின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மொத்தம் ரூ. 21 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும், இதனால் அவரது போர்ட்ஃபோலியோவின் மதிப்பு ரூ. 3.22 கோடியாக இருக்கும்.
  • 60 வயதிற்குள், நேஹாவின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மொத்தம் ரூ. 15 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும், இதனால் அவரது போர்ட்ஃபோலியோவின் மதிப்பு ரூ. 93.94 லட்சமாக இருக்கும்.

இந்த உதாரணத்தைப் பார்க்கும்போது உங்களுக்கே தெளிவாகத் தெரியும், லதா நேஹாவிற்கு முன்பாகவே முதலீடு செய்யத் தொடங்கியதால் அவரது போர்ட்ஃபோலியோ கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி முன்கூட்டியே முதலீடு செய்வதால், கூட்டுவட்டியின் மூலம் ஆண்டுகள் செல்ல செல்ல உங்கள் முதலீடுகள் மீதான ரிட்டர்னை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடுகள் புரிந்து கொள்வதற்காக மட்டுமே.

சேமிப்புகள் மற்றும் முதலீட்டின் முக்கியத்துவம்

சேமிப்பின் மூலமும் முதலீடுகளின் மூலமும் தனிநபர்கள் தங்களின் நிதி இலக்குகளை அடையலாம், இது அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் உதவுகிறது.

அவசரகாலச் சூழ்நிலைகளுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் பணம் திரட்டுவதற்கு சேமிப்பு உதவுகிறது. அதேபோல், முதலீடு செய்வது என்பது உங்கள் பணம் தானாகச் செயல்பட்டு காலப்போக்கில் வருமானம் ஈட்டித்தர உதவுகிறது, இது உங்கள் செல்வத்தைப் பெருக்கவும் நீண்ட கால நிதி இலக்குகளை அடையவும் உதவுகிறது.

சேமிப்பதன் மூலமும் முதலீடு செய்வதன் மூலமும், நீங்கள் ஒரு வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்கலாம், உங்கள் நிதிகளைத் திறம்பட நிர்வகிக்கலாம், வசதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யலாம்.

 

முன்கூட்டியே முதலீடு செய்வதன் ஐந்து பலன்கள்

முன்கூட்டியே முதலீடு செய்வதன் பலன்களைப் போதுமான அளவு எடுத்துக்கூற முடியாது. நீங்கள் இப்போதே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணங்கள் இதோ:

  1. கூட்டு வட்டியின் சக்தி

நீங்கள் முடிந்தளவு சீக்கிரமாக முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களின் முதலீடுகள் அதிகரிப்பதற்கும் கூட்டுவட்டியின் மூலம் வருமானம் பெருகுவதற்கும் அதிகமான நேரம் கிடைக்கும். நீங்கள்  பெறும் ரிட்டர்னும் கூட்டுவட்டியின் சக்தி காரணமாக காலப் போக்கில் கூடுதல் ரிட்டர்னைப் பெற்றுத்தரும், சிறிய முதலீடாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். உதாரணமாக, நீங்கள் 30 ஆண்டுகளுக்கு ஓர் ஆண்டிற்கு 12% ரிட்டர்னில் SIP-இல் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினாலும், நீங்கள் 17.47 லட்சம் ரூபாய் கார்பஸைப் பெறுவீர்கள்.

  1. மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் இருந்து மீள்வதற்கு அதிக கால அவகாசம்

முன்கூட்டியே முதலீடு செய்வது மார்க்கெட் சரிவுகள் அல்லது ஏற்ற இறக்கங்களில் இருந்து மீண்டு உங்கள் நிதி இலக்குகளை அடைய போதியளவு கால அவகாசத்தை வழங்குகிறது. முன்கூட்டியே தொடங்குவதன் மூலம், உங்கள் முதலீடுகளில் அதிக ரிஸ்க் எடுக்க முடியும். அத்துடன் உங்கள் முதலீடுகள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அதிலிருந்து மீள அதிக கால அவகாசமும் கிடைக்கும்.

  1. நிதி ஒழுக்கத்தைக் கட்டமைத்தல்

முன்கூட்டியே முதலீடு செய்வதற்கு நிதி ஒழுக்கமும் உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு வழக்கமான பங்களிப்புகளும் தேவை. இந்தப் பழக்கம் நல்ல நிதிப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும், உங்கள் நிதி இலக்குகளை எளிதாக அடையவும் உதவுகிறது. உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை SIPகளில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதலீட்டுப் பழக்கத்தை வழக்கமாக்கலாம்.

  1. சிறப்பான நிதிப் பாதுகாப்பு

முன்கூட்டிய முதலீடுகள் உங்கள் நிதி இலக்குகளை அடையவும் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் காலப்போக்கில் கணிசமான அளவு வருமானம் ஈட்டலாம், இது உங்களுக்குப் பொருளாதார நிலைத்தன்மையையும் மன அமைதியையும் வழங்கும்.

  1. குறைவான பொறுப்புகளுடன் அதிகமாக முதலீடு செய்யலாம்

நீங்கள் இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கும்போது, நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் குறைவாகவே இருக்கும். அதாவது நீங்கள் முதலீடுகளுக்கு அதிக பணத்தை ஒதுக்கலாம். உங்களின் வயது அதிகரிக்கும்போது, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது, குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத் தேவைகளுக்குப் பணம் செலவழிப்பது போன்ற அதிக நிதிப் பொறுப்புகள் உங்களுக்கு இருக்கலாம். இதனால் உங்களால் அதிகத் தொகையை முதலீடு செய்ய முடியாமல் போகலாம்.

எப்படி முதலீடு செய்யத் தொடங்குவது?

 

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்ட ஒரு சிறந்த வழியாகும். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்க நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகள் இதோ:

 

  1. முதலீடு செய்யத் தொடங்கும் முன், உங்கள் முதலீட்டு இலக்குகளைத் தெரிந்துகொள்வது அவசியம். இது நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய மியூச்சுவல் ஃபண்ட் வகையைத் தீர்மானிக்க உதவும்.
  2. உங்கள் முதலீட்டு இலக்குகளை நீங்கள் அறிந்துகொண்டதும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டை நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்தியாவில் பல மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன, எனவே ஓரளவு ஆராய்ச்சி செய்து, கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ள  மற்றும் உங்கள் முதலீட்டு இலக்குகளுக்கு ஏற்ற ஃபண்டைத் தேர்வுசெய்யவும்.
  3. மியூச்சுவல் ஃபண்டுகளின் வழக்கமான கண்காணிப்பானது முதலீட்டாளர்கள் தங்கள் நிதியின் செயல்திறனைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ளவும், அவர்களின் முதலீட்டு உத்தியில் சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்யவும் உதவுகிறது. இது முதலீட்டாளர்கள் தங்களுக்கான கால வரம்பிற்குள் தங்களின் நிதி இலக்குகளை அடையும் வகையில் முதலீடு செய்வதை உறுதிசெய்ய உதவும்.
  4. புத்திசாலித்தனமாகவும் உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்பவும் முதலீடு செய்வதில் உங்களுக்கு உதவ நிதி நிபுணர் அல்லது பிற நிபுணர்களிடமும் நீங்கள் ஆலோசனை பெறலாம்.

 

இறுதிக் கருத்து

ஆரம்பத்திலேயே நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால், நீண்ட முதலீட்டுக் காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், அதோடு கூட்டுவட்டியின் சக்தியும் சேர்ந்துகொள்ளும். ஆரம்பத்திலேயே முதலீடு செய்வதன் நன்மைகள் பற்றியும் எப்படி முதலீடு செய்யத் தொடங்குவது என்பது பற்றியும் உங்களுக்குத் தெரிந்துவிட்டதல்லவா? இனியும் தாமதிக்காதீர்கள். இப்போதே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்!

பொறுப்பு துறப்பு

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் பல்வேறு வகைகள் பற்றி AMFI இணையதளத்தில் உள்ள தகவலானது, ஒரு நிதித் தயாரிப்பு வகை என்ற வகையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. விற்பனைக்காகவோ விளம்பரத்திற்காகவோ வணிக எதிர்பார்ப்பிலோ வழங்கப்படவில்லை. 

இதிலுள்ள உள்ளடக்கம், பொதுவில் கிடைக்கும் தகவல்கள், உள் தகவல் ஆதாரங்கள், நம்பகமானது என்று நம்பக்கூடிய வகையிலான பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் AMFI உருவாக்கியது. எனினும், அத்தகைய தகவலின் துல்லியத்திற்கு AMFI உத்தரவாதம் அளிக்காது, அந்தத் தகவல் மாறாது என்றும் உறுதியளிக்காது.

இதிலுள்ள உள்ளடக்கமானது, தனிப்பட்ட ஒரு முதலீட்டாளரின் நோக்கங்கள், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆர்வம் அல்லது நிதி சார்ந்த தேவைகள்/சூழல்கள் அல்லது இங்கு விவரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகள் அவருக்குப் பொருந்தும் தன்மை போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு வழங்கப்படவில்லை. ஆகவே, முதலீட்டாளர்கள் இது குறித்து முதலீட்டு ஆலோசனை பெற, தங்களது தொழில்முறை முதலீட்டு ஆலோசகர்/நிபுணர்/வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். 

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் என்பது டெபாசிட் செய்யும் தயாரிப்பல்ல, இவை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது அதன் AMC-இன் பொறுப்பல்ல, மேலும் இவை மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை, காப்பீடும் வழங்குவதில்லை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்பில் உள்ள முதலீடுகளின் தன்மையின் காரணமாக, அதன் ரிட்டர்ன்கள் அல்லது சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது. இதுவரையான பெர்ஃபார்மன்ஸ் பற்றிய தகவல் கொடுக்கப்படும்போது, அது முழுக்க முழுக்க தகவல் தேவைக்காக மட்டும்தானே தவிர, அது எதிர்கால பலன்களுக்கான உத்தரவாதமல்ல.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

286
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்