இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் மட்டுமே முதலீடு செய்கிறதா?

இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள், இந்தியாவில் மட்டுமே முதலீடு செய்யுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பெரும்பாலான இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள், இந்தியாவில் முதலீடு செய்தாலும், ஒருசில திட்டங்கள் வெளிநாட்டு செக்யூரிட்டிகளிலும் முதலீடு செய்கின்றன.

இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களுக்கு யூனிட்களை வழங்குவதற்கு முன்பு, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) ஒப்புதலைப் பெற வேண்டும். திட்டத்தின் முதலீட்டு நோக்கங்கள், முதலீடு செய்யப்படும் செக்யூரிட்டிகளின் வகைகள், நாடுகள்; பிராந்தியங்கள் மற்றும் ஒவ்வொரு செக்யூரிட்டியுடனான தனிப்பட்ட அபாயங்கள் போன்ற தகவல்களைத் தெளிவாக விளக்குகின்ற திட்டத் தகவல் ஆவணத்தை (SID) ஆய்வுசெய்த பிறகே SEBI ஒப்புதல் வழங்கிடும்.

ஒரு திட்டம், வெளிநாட்டு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அல்லது வர்த்தகம் செய்யப்படுகின்ற செக்யூரிட்டிகளை இந்தத் திட்டங்கள் வாங்கலாம். அல்லது இதுபோன்ற செக்யூரிட்டிகளைக் தங்களின் போர்ட்ஃபோலியோக்களில் கொண்டுள்ள பிற வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SEBI-யின் ஒப்புதலைப் பெற்ற பின்பு அவை முதலீடு செய்யலாம். ஆக, இரண்டு வழிகளில் போர்ட்ஃபோலியோவில், வெளிநாட்டுப் பங்குகளைத் திட்டமானது கொண்டிருக்கும்.

வெளிநாட்டு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்த பின்பு, இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள் தினசரி நிகர சொத்து மதிப்புகளையும், போர்ட்ஃபோலியோ வெளிப்படுத்துதலையும், பணமாக்குதலையும் SEBI-ன் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப வழங்க வேண்டும். வெளிநாட்டு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் இதுபோன்ற திட்டங்களுக்கு என தனிப்பட்ட நிதி மேலாளர் இருக்க வேண்டும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்