முதலீடு செய்வதற்கு நேரடி மியூச்சுவல் ஃபண்டு தளங்கள் எந்தளவு பாதுகாப்பானது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பல நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைச் செய்வதற்கான பிளாட்ஃபார்ம்களை இலவசமாக அல்லது கட்டணத்தின்பேரில் வழங்குகின்றன. இந்த பிளாட்ஃபார்ம்களில் பெரும்பாலானாவை SEBI-இல் பதிவு பெற்றவை, ஆகவே சிறந்த ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கும், SEBI கட்டாயம் என விதித்திருக்கும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வழிகாட்டல்களுக்கு இணங்கி செயல்படும். இன்றைய காலகட்டத்தில், ஃபார்ச்சுன் 500 நிறுவனங்கள் கூட ஹேக் செய்யப்படலாம், அப்படி இருக்கையில் மியூச்சுவல் ஃபண்ட் பிளாட்ஃபார்ம்களுக்கும் அந்த ஆபத்து உள்ளது. எனினும், அதற்கு வாய்ப்பு மிகக் குறைவு.

உருவாகி நீண்ட காலம் ஆகாத புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே டைரக்ட் பிளாட்ஃபார்ம்களில் பெரும்பாலானவற்றை தற்போது வைத்துள்ளன என்பதால் அவற்றில் சில மூடப்படலாம் அல்லது பெரிய நிறுவனங்களால் வாங்கப்படலாம். எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டாலும், பதிவுபெற்ற இந்த பிளாட்ஃபார்ம்களின் வழியே செய்த முதலீடுகளைப் பற்றி நீங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் மியூச்சுவல் ஃபண்டின் கணக்கிற்கே செல்கிறது. அந்த ஃபண்டிற்கு என SEBI அங்கீகரிப்பு பெற்ற ஒரு ரெஜிஸ்ட்ரார் இருப்பார். அவர் உங்கள் முதலீடுகளைக் கணக்கில் வைத்திருப்பார். 

உங்கள் முதலீடுகளை அணுக வேண்டுமெனில் எப்போது வேண்டுமானலும் ஃபண்ட் ஹவுஸை நீங்கள் அணுகலாம். டைரக்ட் பிளானின் பயனர் அனுபவம், கட்டணங்கள், கிடைக்கும் சேவைகள் ஆகியவை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிறுவனர்களின் குழு உங்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தால் நிங்கள் டைரக்ட் பிளானைத் தேர்வுசெய்யலாம். உங்கள் முதலீடுகள் அவற்றின் வழியாக செய்யப்படுவதால், அவற்றின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் முதலீடுகள் எப்போதும் ஃபண்ட் ஹவுஸில் பாதுகாப்பாகவே இருக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்